Popular Posts

Monday, March 16, 2009

காணுமுன்னே

குழலினிது யாழினிது -உன்
குரலினையே கேட்குமுன்னே
குயிலினிது கிளியினிது-உன்
தமிழிசையை சுவைக்குமுன்னே
நிலவழகு மலரழகு-உன்
முகந்தனையே பார்க்குமுன்னே
மின்னழகு மானழகு-உன்
நடையினையே காணுமுன்னே
மீனழகு அம்பழகு-உன்
கண்ணதையே சேருமுன்னே

No comments: