Popular Posts

Wednesday, March 18, 2009

கண்ணருகே வெகுதூரமில்லை


கண்ணே பார்த்தாய்

கண்ணசைத்தாய்

கண்ணால் சிரித்தாய்

கண்ணில் பேசினாய்

கண்ணுள் நின்றாய்
கண்ணாய் இருந்தாய்
கண்ணை இணைத்தாய்
கருத்தில் கலந்தாய்
காலத்தை நீட்டினாய்
கோலத்தை மாற்றினாய்
கொள்கையை ஊட்டினாய்
குறிக்கோள் ஆகினாய்

கண்பார்வையாலே கொன்றாய்

காதல் நோய்க்கு காரணமானாய்
காதல் நோய்க்கு மருந்துமானாய்
கண்ணில் தேன்தந்தாய்

காதல் பூவென மலர்ந்தாய்-பெரும்

கண்ணின் போருக்கு காரணமானாய்-ஆனந்த

கண்ணாகி அழுதாய்-பிரிவாலே

கண்ணீரில் அழுகாதே-பிரிவே

கண்ணில் ஒருபொழுதே-மீண்டும்

கண்ணுக்குள் சந்திப்போமே

கண்மணியே சேரும்காலம்

கண்ணருகே வெகுதூரமில்லை

No comments: