Popular Posts

Monday, February 23, 2009

எதை ஆளப்போகிறீர்?


இறையாண்மை

காப்பதற்கா?

கொல்வதற்கா?

உலகமக்களே உங்கள் கண்ணெதிரே

இனவெறியாலே படுகொலைக்கு

பலியாகி ப்ரிதவிக்கும்

ஈழத்தமிழரின் துயரத்தை

பார்த்திடவே மாட்டீரா?-தினம் தினம்

சாகின்ற தமிழ்மக்கள் படும்துன்பத்தை

ஐ. நா.சபை தலையீட்டில்

அமைதி திரும்பிடவே

ஆவண செய்திடத்தான் மாட்டீரா?

எல்லோரையும் கொன்றுவிட்டு

பாலைவனமாய் ஆக்கிவிட்டு

சிங்களவெறியரே - நீங்கள் எதை

ஆளப்போகிறீர்?

No comments: