Popular Posts

Monday, February 16, 2009

பகிர்ந்துண்டு


இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது

ஆராத இன்பம் தரும் பேரழகே

எண்ணுதற்கு எட்டாத எழிலே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

ஆரா அமுதே அளவிலாத விண்மீனே

ஆற்றின்ப வெள்ளமே பேரன்பு உள்ளமே

சேர்த்தென்னை துணையாக்கி சமமாகி

பார்த்தென்னில் பரவசமாய் ஆவாயோ?

பார்தன்னில் பொதுவுடைமை ஆக்காயோ?

பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பிட மாட்டாயோ?

No comments: