Popular Posts

Wednesday, February 4, 2009

இலங்கையிலே


சுவரிருந்தால்தானே சித்திரமே -இலங்கை

யுத்தவெறியன் அழிக்கவந்தான் ஈழமண்ணிலே

தடியெடுத்தான் தண்டக்காரன் ஆகிவிட்டான்

தமிழினத்தை சாய்க்கவந்தான் முல்லைத்தீவிலே

தலைக்கு மேலே சுனாமி கடல்வெள்ளமே போகுது

சாணென்ன முழமென்ன

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்--குண்டுகளை விதைப்பவன்

குண்டுகளைத் தானே அறுப்பான் ஈழமண்ணிலே

வைக்கோற் போர் நாய்குணம் மாறவேணும்-தமிழ்மக்கள்

சுதந்திரத்தை உலகமக்கள் ஆதரிக்கவேணும்-அது

சிங்களமக்களின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடாது

சிங்களதமிழினம் தமிழ்சிங்கள இனம் என்று-இரண்டற

கலந்திருப்பதாலே தமிழ்மக்களும் சிங்களமக்களும்

ஒருமித்த கருத்தொற்றுமை எடுத்திடவேணும்

No comments: