Popular Posts

Saturday, February 7, 2009


ஏடாகோடம்பேசாதே


ஏறுக்கு மாறு;செய்யாதே-உன்


ஒட்டு உறவு; ஆகாது -தினம்


ஓட்டமும் நடையுமாகி;என்றும்


ஓய்வு சாய்வு;எடுக்காமலே


கண்டவன்கடியவனெல்லாம்-ஏச


கண்டது கடியதெல்லாம்;பேச


கணக்கு வழக்கில்லாமல்-வாழ்ந்தால்;


கண்ணும் கருத்துமாய்;இல்லாமலே


கலியாணம் காட்சி;செய்யாமலே


காமா சோமாஎன்றிருந்தால்-உலகம்;


கன்னா பின்னானு திட்டாதா?எதையும்


கிண்டிக் கிளறி;பாக்காமலே--ஏதோ


குஞ்சுங் குழுவானும் என பொறுப்பின்றி


; குண்டக்க மண்டக்கமாய் பேசிக்கிட்டு


[“குண்டக்கா மண்டக்கான்னு” நடந்துக்கிட்டு


குத்தலும் குடைச்சலுமாய்;வாங்கிக்கிட்டு


கூட்டம் நாட்டம்;இல்லாமலே-ஊரை


கூட்டிக் குறைத்து மதிப்பிட்டு மற்றவருக்கு


; கூட மாட ஒத்தாசை செய்யாமலே--திருடி;


கையும் களவுமாய்;மாட்டிக்கிட்டா


கொஞ்ச நஞ்சமாவது ரோசமிருக்கா?;


கொள்வனை கொடுப்பனை;இல்லாம


குளம் குட்டையெல்லாம்;சுற்றித்திரிந்தா


கோள் குண்டுணி;மூட்டிவிட்டு-அப்புறம்


சீத்துப் பூத்தென்று அவமானப்பட்டு


; சொள்ளை சொட்டைனு பேருவாங்கி


துட்டுத் துக்காணி உழைப்பில்லாம


; தூசி துரும்புனு கேவலப்பட்டு;

தோலும் துருத்தியுமாய்; நஞ்சிபோயி

நன்னியும் குன்னியுமாய் பெத்துப்போட்டு

; பிய்த்துப் பிடுங்கி;சோறுபோட்டு

பூச்சி பொட்டு;கடிக்காமலே

பூவும் பிஞ்சுமாய் வளத்து ஆளாக்கி;

பெண்டு பிள்ளைகள்;பரம்பரையாய்

பெற்றது பிறந்தது[ வழிமுறையாய்பேச்சு

பொய்யும் புளுகும்தொடர்கதையாய்;

நடை நடந்து மினுக்கித் தளுக்கி]

; மூலை முடுக்கெல்லாம்;ஓடோடி

வாய்க்கும் கைக்கும்; பத்தாமலே

விட்டகுறை தொட்டகுறையாகி

வீடும் குடித்தனமுமாய் குப்பை கூட்டி;

வேர்த்து விருவிருத்து; வேலை வெட்டிசெய்தாலும் -உலகம்

வேலவெட்டி இல்லாதவன்” என்று சொல்லி;

தூத்தும் பேத்தும்

No comments: