Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்ண்மீது வாழும் நாளிலே நீயும் மக்களுக்கே நல்லது செய்ய நினைத்தாயானால்! மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளி வரிசையினில்

ஒரே ஒருமரணமே ஒருசோக நிகழ்ச்சியாகுமே!
ஒருமில்லியன் மரணங்களே புள்ளிவிவரமாகுமே!மரணத்தின்
அமைதி இல்லாத மரணமே முதுமையானதே!மரணத்தைதவிர
எல்லாவற்றுக்கும் மருந்துண்டு இந்த பூவுலகினிலே!
மரணத்திற்குக் கூட லஞ்சம் கொடுக்கும் தட்டுக்கெட்ட உலகமடா!உன்
மரணத்திற்குப் பின்னே உனக்கு கடன் என்பது இல்லையடா!
வாழ்க்கையின் முன்னறிவிப்பே மரணமானதே!--இனியும்
சாகாமல் இருக்கவே - நாம் தினந்தோறும்
சாகின்றோமே!மரணமே
நாள்,கிழமைக் குறிப்பேட்டினையே பார்க்குமாடா?
ஓடுகின்ற மனிதனே நீ எங்கோதான் ஓடுகின்றாய்-உன்னையும் மரணமே
ஓடிவிரட்டிப் பிடித்துவிடும் தெரியுமா?
ஓ! மனிதனே! உன்வாழ்வின் ஓயாத உழைப்பெல்லாமே!
உனது மரணவீட்டினைக் கட்டுவதற்காகத் தானோ?
மனிதனே நீயும் மண் தானே!
மண்ணுக்கே மீண்டும் நீ செல்வாயே!- நீ
மண்ணிலே வந்தவனே - மீண்டும் நீயே
மண்ணோடு சேர்வாயே!
மண்மீது வாழும் நாளிலே நீயும் மக்களுக்கே நல்லது செய்ய நினைத்தாயானால்!
மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளி வரிசையினில் முன்னணியில் செல்லடா!

No comments: