Popular Posts

Wednesday, May 18, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”யுவன்சங்கர் ராஜா வீட்டில் அவர்பிரிந்த செல்ல நாய்வெண்ணிலா பற்றிய ஒரு கற்பனைபாடல்””--’

செல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே?
சிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன?
அற்றிணைதான் என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே!
உன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே!

எங்கள் குடும்ப மனிதரில் ஒன்றாய் வளர்ந்தாய் நீயே!
அன்பில் மனிதர்க்கு சளைத்ததுதான் நீயில்லையே!
உன்னன்பு நேசம் பாசம் எல்லாம் போயினவே!
இருந்தாலும் நீயெங்கள் நெஞ்சத்தில் வாழ்கின்றாயே!

ஆறறிவு மனிதர்க்கும் இல்லாத அன்புவெள்ளம் பொழிந்தாயே!
நீயில்லை என்றாலும் உன் நினைவு தானே எங்களுக்கு எல்லை!
காணாத காட்சியெல்லாம் நீசெய்த குறும்புதான் எங்கே?
கண்கண்ட ஐந்தறிவு ஜூவனே உனைமறக்க முடியவில்லையே!

செல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே?
சிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன?
அற்றிணைதான் என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே!
உன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே!

No comments: