Popular Posts

Saturday, March 27, 2010

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது. இளமைக் காதல் நெஞ்சுக்கு அறியாது பருவம் பாயும் காட்டாறாகுமடா!அதிலும் பக்குவம் கொண்டால் இன்பமாகுமடா!

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இளமைக் காதல் நெஞ்சுக்கு அறியாது
பருவம் பாயும் காட்டாறாகுமடா!அதிலும்
பக்குவம் கொண்டால் இன்பமாகுமடா!
உருவம் பார்த்து வருகின்ற காதலெல்லாமே
உலகினில் வருத்தம் செய்யும் துன்பமாகுமடா!
கனவினில் வருகின்ற காதலே!
கருத்தினில் நிற்காது ஓடுமடா!
கானலாய் தெரிகின்ற காதலே
கையினில் ஒருபோதும் கிடைப்பதில்லையடா!
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இளமைக் காதல் நெஞ்சுக்கு அறியாது
பருவம் பாயும் காட்டாறாகுமடா!அதிலும்
பக்குவம் கொண்டால் இன்பமாகுமடா!

No comments: