Popular Posts

Monday, March 15, 2010

என் கண்கள் அவனைக் காணும் ஆர்வத்தில் நீரருவியாகவே ஆனந்த கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்குமே

என் தலைவன் அவனின் வருகைதனையே எதிர் நோக்கியே!
வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் அவனைக் காணும் ஆர்வத்தில் நீரருவியாகவே
ஆனந்த கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்குமே
என் இனிய தோழியே!
உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது
பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடியதே, ஒன்றோடொன்று மோதியதே, காற்றோடு கலந்ததே மழைபொழியத் துடிக்கும்படியானதே -அந்த,
வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.
என் இனிய தோழியே!
என் தலைவன் அவனின் வருகைதனையே எதிர் நோக்கியே!
என் கண்கள் அவனைக் காணும் ஆர்வத்தில் நீரருவியாகவே
ஆனந்த கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்குமே

No comments: