Popular Posts

Monday, March 1, 2010

காதலியே உன்னிடமே ! காமனின் அம்பான ஐந்தும் உள்ளதடி! நம் காதல் கவிதையின் இசைதனையே மீட்டுதடி

காதலியே உன்னிடமே !
காமனின் அம்பான ஐந்தும் உள்ளதடி!
காதல் கவிதையின் இசைதனையே மீட்டுதடி!
. அவற்றுள் காதல் கதவினைத் திறக்கவே
காணும் கண்களிலே இரண்டு அம்புகளை விழிகளில் உள்ளதாகவே - காமன் தலைவியாம் உந்தனுக்குக் கொடுத்தானோ! அதனாலே காதல் துணைவனாம்! தலைவனாம் என் உயிருக்கு யாது நிகழுமோ? என அஞ்சும் முன்னே, காமன் உனக்களித்த
உனது மீதமுள்ள அம்புகளும் புன்னகை வடிவினில் என்னெஞ்சினை கவ்விடவே!
எனை நோக்கி பாய்ந்து வந்தனவோ?எந்தனையே நிலைகுலைய வைத்தனவோ?
காதலியே உன்னிடமே !
காமனின் அம்பான ஐந்தும் உள்ளதடி!- நம்
காதல் கவிதையின் இசைதனையே மீட்டுதடி!

No comments: