Popular Posts

Wednesday, March 3, 2010

பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும் தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?

பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும்
தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?
நீரிற் குமிழி யிளமையடா! நாம் சம்பாதிக்கும் காசே
நீரில் சுருட்டும் நீண்ட அலைகளடா! - நீரில்
எழுத்தாகும் நமது உடம்படா!-இக்கலியுலகினிலே நீயும் தனி நலத்திற்கே
நித்தமும் ஆளாய் பறப்பதுதான் ஏனடா?
மெய்யை உணராமலே பொய்யை வீழ்த்தாமலே
உண்மையில் நீயும் உறங்குவதுதான் ஏனடா?
பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும்
தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?
நீண்ட வாழ்வுதனிலே ஒற்றுமையின்றி வேற்றுமையே கொண்டு
நீயும் தனிமைத் தீவாய் வாழ்வதுதான் ஏனடா?
பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும்
தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?

No comments: