Popular Posts

Saturday, May 9, 2009

ஓம் என்பது பேரண்டத்தின் ஓசையடா!


ஓம் என்பது பேரண்டத்தின் ஓசையடா!

நாம் என்பது நம் உலகத்தினில்

நலம்பயக்கும் இயக்கமடா!

ஒன்றுபட்ட உறுதியான சமதர்ம

உரிமை இழக்காத பாதையிலே

உயர்ந்திடும் கோடிக்கரங்களிலே-சுதந்திரத்தை

அடகுவைக்காத உன்னதமான இலட்சியத்திலே

ஆண்டான் அடிமையில்லாத பொதுவுடைமை-காணும்

பூலோக சுவர்க்கத்தை உருவாக்கடா!

No comments: