Popular Posts

Monday, April 20, 2009

ஆணுக்கும் பெண்ணுக்கும்!


அங்கே சென்றமனம் திரும்பக் காணோமே-அன்பே

இங்கே மையல் என்பது இதுதானோ?-காதல்

தலைக்கேறுதே -உள்ளம்

தடுமாறுதே- நானும்

சகித்திடுவேனோ?-எண்ணங்களை

மறந்திடுவேனோ?-அவனும்

என்னைப் போலவே -பிரிவினில்

தவித்திடுவானே-இதையே

தமிழ் கவிஞர்களே -ஏனோ

பாடமறந்திட்டாரோ-என்னமோ

பெண்ணுக்குத்தான் காதலுண்டு

ஆணுக்கு இல்லையென்று

எண்ணிவிட்டாரோ?பிரிவும்,ஊடலும்

ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று உணர்ந்து

இனிவரும் கவிஞரும் எழுதிட மாட்டாரோ?

No comments: