Popular Posts

Sunday, April 5, 2009

நெஞ்சில்


நிறைகுடத்து தண்ணீரா

நிழலாடுது என்சதுரம்--இப்போ

குறைகுடத்து தண்ணீரா

குறைஞ்சதடா உன்னாலே

மறைவிருந்து பார்த்தாயா-கண்ணில்

மதுவூற்றி மயக்கிவிட்டாய்- நெஞ்சில்

மலர்கின்ற காதல்பூ

மலர்ந்ததடா நம்மாலே

படுத்தாலே உன் நினைவு

பாய்விரித்தால் பலகனவு

உண்டாலும் உறக்கமில்லை

உறங்கினாலும் தூக்கமில்லை

ஏக்கமது புடிச்சதடா

என்னுசுரு போகுதடா-என்னோட

தூக்கமது கொறைஞ்சதடா-ஏண்டா

நீவரவே காணோமடா-என்மனத்தை

அராவத வாளாகி-என்னை

அறுத்ததுவே போதுமடா

இரவினிலே வீசுதடா

இளங்காற்று நிலவொளியில்

இள நெஞ்சே வேகுதடா-உனக்கென்

தேமல்மொழி தெரியாதா?-என்

தேன்பேச்சு புரியாதா?

வாழை என்னுடலும்-உனை

வாட்டலையோ? நித்திரையில்

மாடப்புறா நாந்தானே

மாசுபடாச் சித்திரமே

கோடைக் கனவினிலே-கண்ணுக்குள்

கொதிக்கின்றேன் பெண்மணியே

No comments: