Popular Posts

Monday, April 13, 2009

சமதர்மத்தினை ஏற்க தயங்காதே

அன்பை கனிவை அடக்கிவைக்காதே
அறிவை நட்பை ஒதுக்கிவைக்காதே
உறவை உரிமையை அமுக்கிவைக்காதே
உண்மையை நேர்மையை ஒழித்துவைக்காதே
காதலை ஊடலை மறைத்துவைக்காதே
கவிதையை கருத்தினை சொல்லமறக்காதே
கல்வியை கற்பித்தலை கற்றுத்தர மறுக்காதே
புரட்சியை புதுமையை உயர்த்த தவறாதே
ஒற்றுமையை உறுதியினை விட்டுவிடாதே
உழைப்பினை சமதர்மத்தினை ஏற்க தயங்காதே

No comments: