Popular Posts

Friday, April 10, 2009

அறிந்தியா?


தாய் நாவலத்தான் படித்தியா?-பாரதியாரின்,

பாரதிதாசன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்

பாட்டுக்களைத்தான் படித்தியா?-திருமூலர்,

வள்ளலாரின் கருத்துக்களைப் படித்தியா?

சுஜாதாவின் எழுத்து நடைய படித்தியா?

பாலகுமாரனின் கருத்துச் செறிவ படித்தியா?

பட்டுக்கோட்டை பிரபாகரின் நகைச்சுவை நடையத்தான் படித்தியா

வாசிக்கும் வழக்கத்தத்தான் வளத்தியா?

நாட்டு நடப்பத்தான் படித்தியா?

நல்லதத்தான் படித்தியா?

மூலதனத்த படித்தியா?

மார்க்ஸீயம் படித்தியா?

மக்கள்ஜன நாயகத்த உயர்த்தினியா?-புரட்சிகர

மாற்றத்தத்தான் அறிந்தியா?

No comments: