Popular Posts

Monday, April 13, 2009

தியாகத்தின் தழும்புகளோ?

மழைவெறித்த பின்னும்
மரத்தினில் தேங்கி நிற்கும் மழை நீரோ?-அது
எந்ததேசத்திலும் எப்போதும்
கடந்து நிற்கும் காட்சிகள் தானே- நான்
வாசித்த கவிதைகளோ?-என்றும் எந்தன் துணைத்
தோள்கொடுக்கும் புத்தகங்களோ?-எந்தன் மனதினில்
நிழலாடும் மலரும் நினைவுகளோ?-மனித நேயமின்னும்
சாகவில்லை என்று சத்தியம் செய்கின்ற
ஆலமரத்தின் விழுதுகளோ?
அடிமரத்தின் வேர்களோ?
தியாகத்தின் தழும்புகளோ?

No comments: