Popular Posts

Monday, April 13, 2009

தலைவி உனக்கு

கண்ணுள்ளே என்னகண்டாய்?--காதலன்
கண்ணுள்ளே என்ன கண்டாய்?
காதல் பார்வை கண்டவளும் நீதானே
காதலை நெஞ்சினில் கொண்டவளும் நீதானே
காதலன் கண்ணிலே புகுந்தானா?
கருத்திலே நின்று சிரித்தானா?
காதலிமனதினை கெடுத்தானா?
கண்கணைதனை தொடுத்தானா?- நீயும்
கனவுவிண் ணிலே நடந்தாயோ?-விரக
தாபமும்மண்ணிலே கொண்டாயோ?
மயக்கமும் தயக்கமும் அடைந்தாயோ?
தலைவி உனக்கு தலைவனும் கிடைத்தானா?

No comments: