Popular Posts

Wednesday, April 1, 2009

போராலே தீர்வுகள் இல்லை,அரசியல் தீர்வொன்றே தீர்வாகுமே!


போராலே தீர்வுகள் இல்லையென்று

புரிந்துகொண்டார் விடுதலைப்புலிகளே-அரசியல்

தீர்வொன்றே தீர்வாகுமே -அரசில் சம உரிமை

வேண்டுமென்பதே நியாயமாகுமே-இனவெறி

அழிகவென்றே கொட்டுமுரசே-இலங்கையிலே

அமைதிவேண்டி கொட்டுமுரசே-அதிகார

இலங்கை அரசே உணர்ந்துகொள்வாய்-இன்னும்

பிடிவாதம் நீகொண்டு அழிந்துபோகாதே-உலக

நாடுகளே இலங்கைக்கு அறிவுறுத்துங்கள்-ஹிட்லர்

அதிகாரவெறி அழிவினையே உணர்த்துங்கள்-பாட்டாளி

அதிகாரமே இலங்கையிலே வருகிறவரையினிலே-இலங்கை

தமிழர்களின்,சிங்களரின் ஒற்றுமை ஏற்படுகிறவரையினிலே

தனியுடைமைச் சதிகாரர் சகுனி வஞ்சகங்கள்-இலங்கையிலே

தொடர்கதையாய் தொடர்வதுதான் நிற்காதே-மக்கள்

ஜன நாயகபுரட்சிதான் தீர்வென்ற உண்மைதனை-தமிழ்சிங்கள

இலங்கைமக்கள் உணர்ந்துவிட்டால் துன்பமில்லை

No comments: