Popular Posts

Friday, December 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே! தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

எவ்வளவு பெரிய மக்கள் நெரிசலிலும்
எவ்வளவு நிறையக் கூட்ட கும்பலிலும்

எனக்கென்றே ஒரு தனிப் பார்வை
எனக்கென்றே உன் இதயத்திலே ஒரு தனியிடம்

எப்போதுமே உன்னிடத்தில் மிச்சம் இருக்குமே என் தோழி!

நிலவைத்
தொலைத்த வானம் மெளனமாய்
அழுகிறது போலவே அடிஉந்தன் கண்களில் அது என்ன கண்ணீர்
மழை !

நான்கு பகுதியாகவே ,
பிரிந்து கிடந்தபோதிலும் -இதயமே ,
ஒன்றாக சேர்ந்து துடிக்கிறதே!

கண்கள் நான்காய் தனித்தனியாய் இருந்த போதிலும்-ஒரே காட்சியாகியே
காதலினில் ஒன்றாகவே சேர்ந்து உறவானதே!.

முதல் பார்வைத் துடிப்பினிலே ஆயிரங்காலத்துப் பயிராம்
உயிர் ஒன்று பிறக்கிறதே!-உன்

ஒவ்வொரு அன்புப் படிப்பிலும்
உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே!

துன்பத்திலும்,
இன்பத்திலும்,காதலன்பே
அது இனிய அனுபவத்திலும் அனுதினமும் புதிய
உணர்வுகளுடனும் துடிக்கிறதே..

இதயத்தின் அந்த துடிப்பானதொரு அன்புச்
சத்தம் மட்டும் ஆண்டாண்டு காலமாகவே ,
உணர்தலின் நேச தேடலிலே காதில் ரீங்காரமாகியே
கேட்கிறதே!.




















No comments: