Popular Posts

Friday, December 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-/-”:கடைத்தேங்காய்க் கடைகள்”

கடைத்தேங்காய்க் கடைகள் இருக்கின்ற வரையினில்-இங்கு
வழிப்பிள்ளையார்களுக்கு கொண்டாட்டம் தான்!
கையினில் காசு உள்ளவர்கள் எல்லாம் தேங்காய் உடைப்பார்கள்
காசில்லாத ஏழைகளோ! சூடத்தை ஏற்றிடுவார்கள்.
சூடத்தை ஏற்றிடக் கூட முடியாதவர்கள் கைதனைக் கூப்பி
ஆண்டவனைத் தொழுதிடுவார்கள்!
அவரவர் ஆண்டவனை அவரவர் வழியினில்
ஆண்டாண்டுக் காலமாய் தொழுதிடுவார் மக்கள் அனைவருமே!
மனதினை ஒருமுகப் படுத்திடவே முன்னோர்கள் வகுத்திட்ட
வழிமுறைகள் மரபுவழி வழிபாடுகள் ஆயினவே!-ஆனாலோ
மனிதரோ! பலபேதங்கள் கொண்டு மதவெறி கொண்டாரே!
ஒற்றுமைக்கு வழிசொன்ன முன்னோர் வழிவிட்டு
வேற்றுமையில் ஏனோ மனிதர்கள் பிரிந்து கிடக்கின்றாரோ?






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-/-:

No comments: