Popular Posts

Sunday, December 5, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /- அவளுக்கு !

மருதாணியே மருதாணியே - நீயும்
தலையத் தலைய ஆட்டாதடி! -என்னையே
சீண்டித்தான் பார்க்காதடி! -
என்காதலியின் மேனி வழவழப்பாகவே -உன்னையே
அரைச்சுத் தேய்த்துக் குளிக்கச் சொல்லப் போறேண்டி!

கோரைக் கிழங்கே கோரைக் கிழங்கே!
காலையே தீண்டாதே !-என்காதலியாம் கனிமொழியாம்
அவளுக்கு !
காலமெல்லாம் அழகு மெருகு ஏறிடவே!
உன்னைய
தேனுல கலந்து உண்டுவரவே அவளோட
மேனி பொலிவு பெறும் அதனாலே
உன்னையே வேரோட எடுத்திடப் போறேனே!

அருகம்புல்லே அருகம்புல்லே சும்மா சும்மா ஆடாதே!
என்காதலிக்கு முகத்தழகும் கூடிடவே!
உன்னைய நீர்விட்டு நன்றாய்
அரைத்து வெல்லம் சேர்த்து கண்ணே
அனுதினமும் உண்டுவரச் சொல்லப் போறேண்டி!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

No comments: