Popular Posts

Thursday, November 25, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"இந்த முதாலாளித்துவ சமுகம் உள்ளவரை !'

அது என்ன? பெண்களுக்கு மட்டுமே !
இது என்ன?
அன்றாட
நிகழ்வுகளாய் சமூகத்திற்கே வேண்டாத நிகழ்ச்சியாய்
அவர்களுக்காகவே ஸ்டவ் வெடிக்கிறது?
தீப்பிடிக்கிறது!
அன்று !
கற்புக்காக மட்டுமே!
சீதையை ராமன் எரித்தான்!
அவளோ!
நெருப்பிருந்து மீண்டுவந்து
கற்புக்கரசி என்று நீரூபித்தாளாம்!
ஆனால் இன்று!
எங்கள் சகோதரிகளோ!
அன்றாடம்
வரதட்சணைக்காக ,காசிற்காக,கட்டித் தங்கத்திற்காக!
சுடு நெருப்பினில் எரிக்கப் படுகின்றார்கள்!

அய்யகோ !இவர்களோ அந்த சீதையைப் போலவே!
நெருப்பிலிருந்து மீண்டு மீண்டும் வரவில்லையே!
இந்த ஆணாதிக்க சமூகத்தையே எரித்திடவில்லையே! அதிகாரத்தில்
சொத்துடைமை சமூகமாம் இந்த முதலாளித்துவ சமூகம் உள்ளவரை
இந்த அவலங்கள் தொடர்வது நிற்காதே!




No comments: