Popular Posts

Monday, November 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மக்கள் ஜன நாயகம்”

ஓடி ஓடி ஓடியே உட்கலந்த அன்பு சோதியையே மனித நேயத்தையே!
நாடி நாடி நாடியே பகுத்தறிவினில் ஏற்றுக் கொண்டால் இன்பமாகிடுமே!- தனியுடைமைச் சுரண்டலாலே சுரண்டப்பட்ட மனிதர்கள்
வாடி வாடி வாடியே அடிமட்டத்தில் அமிழ்ந்துவிட்ட மாந்தர்கள்
கோடி கோடி கோடியே மண்ணில் எண்ணிறந்த கோடியே!அனைத்து மக்களும்
கூடி கூடி கூடியே ஒற்றுமையில் கூடியே!போராடி போராடி போராடியே!
தேடி தேடி தேடியே உண்மைச் சுதந்திரத்தைத் தேடியே!-மக்கள் ஜன நாயகம்
பாடி பாடி பாடியே எல்லோரும் வாழும் சுவர்க்கம் காணுவார்!

No comments: