Popular Posts

Saturday, February 12, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’நட்பாகவே விடிவெள்ளியே!

இருளின் இசையே ! பனியினில் நனைகின்றதே!
தென்னோலை ஓரமே!
ஒளியினைத் தடவிடும் சந்திர உதயமே!
பார்த்து பார்த்து யுகயுகமாய் பேசிடவே!-
பூத்துக் குலுங்கிடும் ஆகாய தோட்டமே!- விண்
மீன்களின் கண்சிமிட்டல்களிலே!
தொன்றிடும் எண்ண எண்ண ரகசியங்களோ?
காலந்தோறும் மனதிலென்ன? தாகங்களோ?-அலையும்
மேகம் வரும்பொழுதுக்கே வெள்ளிமீனின்
மவுனமான தவமென்னவோ?

பஞ் சாரக் கூடைக்குள்ளே
கூவுகின்ற சேவலுக்கும்
செம்பஞ்சுக் குழம்பாகவே
சேதிசொல்லும் கீழ்வானுக்கே!
இடைவெளியில் தோன்றுதடி
நட்பாகவே விடிவெள்ளியே!

No comments: