Popular Posts

Monday, January 19, 2009

ஈழமண்ணிலே


தேனிலும் இனிமையே

தெவிட்டாத அமுதமே

தேடிக்கிடைக்காத

ஒப்பற்ற செல்வமே--தமிழ் ஈழமே

கதவு திறந்தது

கட்டுக்கள் உடைந்தன

சுதந்திர மூச்சே

உரிமை வீச்சே

வாழ்வா? சாவா?-ஈழமண்ணில் கடும்போர்

ஏ உலக நாடுகளே--

காசாவைத்தான் பார்ப்பாயா?--உலகமே

ஈழத்தை பார்க்கமாட்டாயா?

ஒருகண்ணில் வெண்ணை

மறுகண்ணில் சுண்ணாம்பா?

உலகமக்களே நீங்கள்-ஈழத்தில்

அமைதி திரும்பவைக்க மாட்டீரா?

மாற்றாந்தாய் மனோபாவத்தை

மாற்றிடத்தான் மாட்டீரா?

No comments: