Popular Posts

Friday, December 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே! தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

எவ்வளவு பெரிய மக்கள் நெரிசலிலும்
எவ்வளவு நிறையக் கூட்ட கும்பலிலும்

எனக்கென்றே ஒரு தனிப் பார்வை
எனக்கென்றே உன் இதயத்திலே ஒரு தனியிடம்

எப்போதுமே உன்னிடத்தில் மிச்சம் இருக்குமே என் தோழி!

நிலவைத்
தொலைத்த வானம் மெளனமாய்
அழுகிறது போலவே அடிஉந்தன் கண்களில் அது என்ன கண்ணீர்
மழை !

நான்கு பகுதியாகவே ,
பிரிந்து கிடந்தபோதிலும் -இதயமே ,
ஒன்றாக சேர்ந்து துடிக்கிறதே!

கண்கள் நான்காய் தனித்தனியாய் இருந்த போதிலும்-ஒரே காட்சியாகியே
காதலினில் ஒன்றாகவே சேர்ந்து உறவானதே!.

முதல் பார்வைத் துடிப்பினிலே ஆயிரங்காலத்துப் பயிராம்
உயிர் ஒன்று பிறக்கிறதே!-உன்

ஒவ்வொரு அன்புப் படிப்பிலும்
உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே!

துன்பத்திலும்,
இன்பத்திலும்,காதலன்பே
அது இனிய அனுபவத்திலும் அனுதினமும் புதிய
உணர்வுகளுடனும் துடிக்கிறதே..

இதயத்தின் அந்த துடிப்பானதொரு அன்புச்
சத்தம் மட்டும் ஆண்டாண்டு காலமாகவே ,
உணர்தலின் நேச தேடலிலே காதில் ரீங்காரமாகியே
கேட்கிறதே!.




















Saturday, December 25, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்ப்போடுதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்ப்போடு துவங்கிடுதே
அதுவும் ஒரு நல்ல அனுபவத்தோடு முடிகின்றதே!வாழ் நாளின்
ஒவ்வொரு நொடியும் நமக்களித்த கொடையல்லவா?-என்றும்
உண்மை வாழ நாமும் உறுதிகொள்வது நம் கடமையல்லவா?








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஈசல் குஞ்சுகளே !

தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!-தம்முயற்சியினாலே!
தன்னம்பிக்கையாலே !
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!-மானிடர்க்கோ!-எத்தனைமுறை
வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் சூட்சுமத்தை சொல்லித் தந்தனவே!

அந்திவேளை இது
ஆரஞ்சு ஒளிக்கோடுகளாய்
கூட்டம் கூட்டம் கூட்டமாய் இறகுகள் மினுங்கவே!
நூற்றுக் கணக்கினில் ஈசல் குஞ்சுகளே!-சுயமாய்
தாங்களும் பறந்திடவேண்டி
ஆகாயம் தேடிப் பறந்து போயினவே!-ஆனாலும்
பூமிதன்னில் சோர்ந்து வீழ்ந்தனவே!
சோர்ந்து வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிப் பறந்தனவே!
தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!












தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்மனசே என்மனசே!

என்மனசே என்மனசே!
ஒத்தையடி பாதையையும் மறந்துட்டியா>--அந்தகுளிர்

வேப்பமர நிழலையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னத்தமக போட்டுவச்ச அழகான
பரங்கிப்பூ வெச்சபச்சரிசி கோலத்தையும் மறந்துட்டியா?>

என்மனசே என்மனசே-என்னாசை
அத்தமகள காணப்போன கொல்லையிலே
தும்பப்பூவ உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சியையும் மறந்துட்டியா?

என்மனசே என்மனசே
காலமெல்லாம் காதுல ரீங்காரம் பண்ணுகின்ற- நம்ம
நாட்டுப்புறப் பாட்டையுந்தான் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே-
நானொருபக்கம் அவளொருபக்கம் உச்சிகுளிரும்
ஓடை நீரு குளியலையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அந்தக் குளத்து நீருல மழைவிழுகின்ற
அழகும் கொப்புளச் சத்தத்தையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
ஆடும்கம்பால் கொல்லைவிட்டுப் பறந்திடும்
காட்டுப் பறவைகளின் குரலோசையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அசையும் சிலந்தி வலையிலும் அழகுசெய்யும்
இளம்பனித் துளியைப் பார்த்ததையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
கருப்பசாமி கோவில் திருவிழாக் கொண்டாட்டம்-அந்த
வழுக்கை மண்டைத் தாத்தா கிண்டலுந்தான் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னதான் வருமானம் என்றாலுமே இழந்துபோன-பெரிதான
அந்தகிராமத்து சுகங்களையும் தான் நீயும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே!












Thursday, December 23, 2010

!தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் தேனமுதையே”

வெள்ளை நிறக் காகிதத்தில் ஒரே ஒரு வரியினிலே ஒரு கவிதை எழுதினேனே!!அதுவே
காதலியே உந்தன் பெயரானதோ?-இல்லை

உள்ளமிரண்டிலும் வெள்ளமான காதல் தேனமுதையே குழைத்து

நம்மிருவருக்கும் இன்பத்தின் எல்லையினை உணர்த்திய காவியமானதோ?


தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நெஞ்சினிலே!

மண்ணினைத் தொடாத விழுதாம் அவளின் கூந்தலிலே
அந்த காதல் ஒற்றை ரோஜாவே
ஊஞ்சலாடுகிறதே!
அன்பினையே ஒரு புன்முறுவலிலே எடுத்துச் சொல்லியே
ஆனந்த நடனத்தையே நெஞ்சினிலே ஆட்டுவித்ததே!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலாம் ஒரே தூண்டிலிலேதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

கண்ணாம் இரு மீன்கள்
மாட்டிக் கொண்டனவோ!
ஒரே தூண்டிலிலே -காதலாம்
ஒரே தூண்டிலிலே!
நெஞ்சாம் நேசத்திலே
நெருக்கும் பாசத்திலே
சிக்கிக் கொண்டனவோ!
அன்புகொண்ட இதயங்களே!