Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அமைதியை தேடிடும் உள்ளங்கள் காதல் அன்புக்குள் சொந்தமானதே!

அந்தியின் வரவுக்கு ஏங்கிடும் மனமே!-தேனிசை குயில்பாட்டு கேட்டிடுதே!
அலைபாயும் மனதிற்கு ஆறுதல் பாட்டானதே!
அருகினில் இளந்தென்றல் தழுவி தேறுதல்சொன்னதே!
அமைதியை தேடிடும் உள்ளங்கள் காதல் அன்புக்குள் சொந்தமானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/செல்லமழையே செல்லமழையே

செல்லமழையே செல்லமழையே கரைந்து போனது மணல்வீடு-தேம்பிய
சின்னஞ்சிறு சிறுமியின் தலை நீவ நீயும் வந்தாயோ?
செல்லமழையே செல்லமழையே !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நிலவின் தரிசனமே நானும் காண இருப்பதாலே!

தூக்கமே தூக்கமே நீயும் தொலைந்து போகமாட்டாயோ?-என்னையும்
தொடர்ந்துவந்து துன்பம்தந்து கொல்லாமல் இருப்பாயே!? சன்னலுக்கு வெளியே
தரிசனம் தரிசனமே ! நிலவின் தரிசனமே நானும் காண இருப்பதாலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பகலில் பகலில் ஒருஜனனமே பறவைகளின் ஓசையிலே

பகலில் பகலில் ஒருஜனனமே
பறவைகளின் ஓசையிலே
உதயம் உதயம் சூரிய உதயமே!தினமும்
உலக உயிர்களின் ஜூவபயணமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அன்பகத்து இல்லாத இல்வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாய் ஆக்குவதுண்டோ?

அந்த கள்ளிச் செடியிலும் அழகிய பூக்களே!சூடுவார் யாருமில்லையே!
இந்த பாறை மணலிலும் ஈரக்கசிவுகளே நீரைக்குடிப்பார் யாருமில்லையே!
எந்தகாலத்திலும் கானல் நீரே தாகத்தைத் தீர்த்ததாய் கண்டாருமுண்டோ?
அன்பகத்து இல்லாத இல்வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாய் ஆக்குவதுண்டோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆனைய பூனையா மாற்றிடுவாங்க! பூனைய ஆனையா காட்டிடுவாங்க!

ஊரையே உழக்காலே அளப்பாரே வஞ்சகரே!
நாட்டையே நாழியாலே அள்ளுவாரே துரோகிகளே!-இவர்களோ!
ஆனைய பூனையா மாற்றிடுவாங்க!
பூனைய ஆனையா காட்டிடுவாங்க!தனியுடைமை தத்துவத்தில்
ஆளவந்த அரசாங்கத்தின் கைப்பாவை ஆகிடுவாங்க!
இத்தேச மக்களுக்கே எமனாக ஆவாங்க!
மக்கள் வாழ்ந்தாலும் செத்தாலும் இவர்களுக்கு கவலையென்பது இல்லையடா!
மண்ணில் சுய நலமே உருவான ஈனங்கெட்ட மானங்கெட்ட ஜென்மங்களடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சுதந்திரமாய் சுற்றிவருகின்றாள் நிலவுதேவதையே!

வானத்தில் முல்லைமலர்ப் பந்தல் போட்டதாரு?அழகான பெண்
ஆகவந்து பறிக்கப் போகின்றாள் நிலவுதேவதையே!
ஆதாரம் ஒன்று இல்லாமலே !
அந்தரத்தில் ஓடுகின்றாள் நிலவுதேவதையே!-சொந்தம்
ஆன இடம் வானம் என்பதாலே
சுதந்திரமாய் சுற்றிவருகின்றாள் நிலவுதேவதையே!