Popular Posts

Monday, October 17, 2011

மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?

காலம் ஒருகோலம் போட்டதே!-அதுவும் கண்ணீரில் கரையாமல் போனதே!\ நானும் நீயும் சேர்ந்தே-என்றும் காணும் பேரின்பம் அன்பே!~-அதுவே காதலே என்றால் மிகையாமோ? எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுந்ததே! ஏட்டினில் சொன்னது கொஞ்சமடி தோழியே!!-உன் கண்ணும் என்கண்ணும் சேர்ந்த போதிலே! காணும் இன்பத்திற்கே ஓர் எல்லையுண்டோ? மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?வாழ்வில் ஏமாற்றம் என்பது தொடர்வதுண்டோ?-மனிதத் தோற்றம் குரங்கில் இருந்தன்றோ?அதுவும் மாறிவந்த பரிணாம வளர்ச்சி அன்றோ?

No comments: