Popular Posts

Wednesday, February 25, 2009

ஐந்தறிவு


காதலுமில்லை கருணையுமில்லை

கல்யாணம் செய்வதற்கு

காசு நகை பெரிதென்று-அன்பில்

காணும்துணை சிறிதென்று-தூரப்

போகிறானே தலைவனவனே-தூய

உள்ளத்தைத் தான் புறக்கணைத்தே

உள்ளன்பைக் காணாமலே-அவன்

ஆறறிவு மானுடனா?--இல்லை

ஐந்தறிவு விலங்குதானா?

பெண்ணென்றால் எளப்பமாக

பேடியவன் எண்ணிவிட்டானா?-அவன்

ஆணாதிக்க சமூகத்தில்

அவலத்தின் உச்சக்கட்டம்

பெண்களை என்ன அவன்?

ஏளனமாய் எண்ணிவிட்டானா?-சமூகத்தில்

மூளைகெட்ட முடமானவன்-வாழ்க்கைதனை

சீரழிக்கும் துரோகியவன்



No comments: